சூரியன் சுக்கிரன் சேர்க்கை: அடுத்த 10 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

Tue, 06 Sep 2022-6:05 pm,

சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அடுத்த 15 நாட்களில் பெரிய நன்மைகளை பெறுவார்கள், சாதனைகளை செய்வார்கள். சுக்கிரன் சஞ்சாரம் மற்றும் சூரியன் - சுக்கிரன் சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கச்செய்ய உள்ளது. 

சுக்கிரன் சஞ்சாரத்தால் உருவாகும் சூரியன் சுக்கிரன் சேர்க்கை ரிஷப ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். அவர்களுக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும். தொழிலில் பெரிய சாதனைகளை செய்வீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் மதிப்புமிக்க ஒரு பொருளை வாங்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். வசதிகள் பெருகும். பழைய ஆசைகள் நிறைவேறும். தனிமையில் இருப்பவர்களுக்கு துணையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.

சூரியனும் சுக்கிரனும் சிம்ம ராசியில் இணைந்திருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாக்கப்படும். இதனால் நிதி நிலைமை வலுப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன், சுக்கிரன் சேர்க்கை மிகுந்த பலனைத் தரும். அவர்களின் வருமானம் கூடும். சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் அமையும். அதிக ஊதியத்துடன் புதிய வேலை வாய்ப்பு வரலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link