சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது நடைபெறும்?

Tue, 13 Feb 2024-1:24 pm,

சென்னை நகரில், ஃபார்முலா 4 கார் பந்தயம் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

சென்னை தீவுத் திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்குகள்  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, கார் பந்தயம் குறித்த அரசின் நிலைப்பாடு என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மழை, வெள்ளம் காரணமாக கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டதாகவும், ஜூன் மாதத்திற்கு பிறகு கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மேலும், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளதாகவும், ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும் எனவும், மருத்துவமனையும் அனுமதி அளித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

 

இதையடுத்து வழக்குகளின் மீதான தீர்ப்பை வரும் பிப்ரவரி 16ம் தேதி பிறப்பிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link