கோடையில் தினமும் எலுமிச்சை ஜூஸ் அருந்த வேண்டும்... காரணம் இது தான்..!!

Wed, 03 Apr 2024-4:52 pm,

எலுமிச்சை நீரில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. கடும் கோடையில்  வியர்வை மூலம் இழக்கப்படும் இந்த எலக்ட்ரோலைட்டுகளை  ஈடுகட்ட எலுமிச்சை உதவுகிறது. மேலும், கோடை காலத்தில்  உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக விளங்கும் இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

வைட்டமின் சி  நிறைந்த எலுமிச்சை கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. ஆரோக்கியமான சருமம், முடி மற்றும் நகங்களுக்கு இந்த சத்து அவசியம். முதுமை அண்டாமல் இருக்க இது உதவுகிறது

எலுமிச்சை நீரில் உள்ள சிட்ரிக் அமிலம் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, அஜீரணம், குடல் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும்.

எலுமிச்சை ஜூஸை குறிப்பாக காலையில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளும் போது, ​​பித்த உற்பத்தியை தூண்டி, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க உதவுகிறது. 

எலுமிச்சையில் உள்ள நீர்சத்து மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து காரணமாக வயிறு நிறைந்த உணர்வைத் தரும். கூடுதலாக, எலுமிச்சை ஜூஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது.

எலுமிச்சை நீரில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை  குறைக்கவும், உதவும். கூடுதலாக, சருமத்தை நீரேற்றமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link