புதுச்சேரியில் வரும் ஜூன் 4-ம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கூட இருப்பதாக பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 26-ம் தேதி கூடியது. அன்றைய தினம் அரசின் மூன்று மாத செலவீனங்களுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி பேரவையில் தாக்கல் செய்திருந்தார். 


இதனையடுத்து கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2018 - 2019 நிதி ஆண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய, வரும் ஜூன் 4-ம் தேதி சட்டப்பேரவை கூட உள்ளதாக பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார்.