கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நிலையில் குறைந்தது 3 முறை டெல்லி - கர்நாட்டக பயணம் மேற்கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.


ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக 3 முறை கர்நாடகாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர். முன்னதாக ராகுல் 6 கட்ட பயணத்தினை கர்நாடகாவில் மேற்கொண்டார். இந்த பயணங்களில் கர்நாடக மக்களிடம் பெரும் வரவேற்ப்பு பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


கர்நாடகா தேர்தல் 2018...


  • வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் - ஏப்ரல் 17

  • வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 24

  • கர்நாடக தேர்தல் - மே 12, 2018

  • வாக்கு எண்ணிக்கை - மே 15, 2018

  • 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.