பாரத பிரதமா் நரேந்தர மோடியுடன் மக்கள் தங்கள் கருத்துகளை கூறவும், பகிர்ந்துகொள்ளவும் 'NaMo' என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலி மக்களின் தகவல்களை திருடுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னதாக தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகுல் காந்தியின் இந்த சர்ச்சைகுறிய கருத்திற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இன்று காலை பாஜக தலைவர் ஸ்மிரித்தி இராணி கண்டனம் தெரிவித்தார்.


இந்நிலையில் தற்போது பாஜக கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பாட்ரா தெரிவிக்கையில் "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொழில்நுட்பம் குறித்து தெரியாமல் பேசுகின்றார்" என தெரிவித்துள்ளார்.


முன்னதாக NaMo செயலியை குறித்து பிரான்ஸ் இணையத் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எலியாட் ஆல்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த செயலில் பயனரிடம் கோரப்படும் தகவல்கள் அமெரிக்காவில் உள்ள கிளவா் டாப் என்ற நிறுவனத்துடன் பகிரப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.


இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:



“ஹாய். என் பெயா் நரேந்திர மோடி. நான் இந்தியாவின் பிரதமா். எனது செயலியை நீங்கள் பயன்படுத்தினால் உங்களது அனைத்து தகவல்களையும், உங்களின் அனுமதியில்லாமல், அமெரிக்க நிறுவனங்களில் உள்ள எனது நண்பா்களுக்கு வழங்குவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்த கருத்திற்கு தற்போது பாஜக தரப்பில் கண்டனங்கள் எழுந்த வண்னம் இருப்பது குறிப்பிடத்தகது!