இமாச்சலப்பிரதேசம் மாநிலம் காங்க்ரா மாவட்டத்தின் நூர்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விபத்தில் சுமார் 25 பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 4 மாணவர்கள் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து விபத்து நடந்த பகுதிக்கு தேசிய பேரிடர்  மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்புபணியில் ஈசுபட்டுள்ளனர். 


விபத்தில் காயமடைந்த மாணவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.



இதையடுத்து, காவலர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் தெரிய வில்லை.