coronavirus pandemic come to end: கொரோனா வைரஸ் தொற்று (Coronavirus pandemic end) எப்போது முடிவுக்கு வரும்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது. ஆனால் ஜோதிடர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இதோ இப்போ முடிந்துவிடும், அதோ அந்த மாதத்தில், அந்த காலத்தில் முடிந்துவிடும் எனக்கூறி வரும் வேளையில், சில விஞ்ஞானிகள் திங்கள் கணிப்பை வெளிப்படுத்த விரும்புகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தானின் (Harsh Vardhan) சமீபத்திய கருத்துக்களின்படி, கொரோனா வைரஸின் பரவல் ஏற்கனவே இந்தியாவில் உள்ளது, ஏனெனில் "மொத்த கொரோனா பாதிப்புகளில் பாதி அளவு மூன்று மாநிலங்களிலிருந்து மட்டுமே உள்ளது. மற்ற ஏழு மாநிலங்களில் பாதிப்பு 30 சதவிகிதம்." ஆனால் இந்தியா தற்போது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 பாதிப்புகளை தாண்டியுள்ளது. மேலும் வரைபடம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 


மருத்துவ வரலாற்றாசிரியர்கள் இரண்டு வகையான முடிவுகளை அங்கீகரிக்கின்றனர். ஒன்று மருத்துவ முடிவு, மற்றொன்று சமூக முடிவு. மருத்துவ முடிவு (Medical Ending) என்பது நோய்கான மருந்து கண்டுபிடிக்கும் போது நோய் பரவுவது கட்டுப்படுத்த முடியும். அதில் மக்கள் தங்கள் கவலைகளைத் தாண்டி முன்னேற முடியும். 


ALSO READ |  நாட்டின் முதல் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்


இரண்டாவது சமூக முடிவு (Social Ending). மக்கள், அரசாங்கம் பொருத்தவரை, தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று முடிவு செய்யும் போது, நோயின் தீவிர தன்மை ஏதேனும் ஒரு வகையில், மீண்டும் பரவத்தொடங்கும். ஏனெனில் அரசியல் தலைவர்களும் சமூகமும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல் முன்னேற முடிவு செய்யலாம். ஆனால் இன்றைய கொரோனா பாதிப்பை பார்த்தால், முன்னேறுவார்கள் என்ற முடிவுக்கு வருவது ஆபத்தை விளைவிக்கலாம். 


தடுப்பூசி தயாரிப்பது மிக முக்கியம்: 
"புதிய கோவிட் -19 நோய் தொற்று எப்போது குறையத் தொடங்கும்" என்ற கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கும் வழக்கமான வழி தடுப்பூசியை நோக்கியதாகும். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், சோதனை செய்யப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டு, மக்கள் தொகையில் கணிசமான விகிதத்தில் நிர்வகிக்கப்பட்டதும், சமூகம் SARS-CoV-19 வைரஸுக்கு எதிராக "நோய் எதிர்ப்பு சக்தியை" பெறும், மேலும் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். மக்கள் தொகையில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற வேண்டும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. 


ALSO READ |  RUSSIAN COVID VACCINE: தடுப்பூசியை உற்பத்தி செய்ய இந்தியா - ரஷ்யா ஆர்வம்


உலகில் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த ரஷ்யா!!
ரஷ்யா தனது முதல் கோவிட் -19 தடுப்பூசியை "ஸ்பூட்னிக் வி" (Sputnik V) என்ற பெயரில் பதிவு செய்தது. ரஷ்ய அதிகாரிகள் இது தடுப்பூசி பாதுகாப்பான, நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கியதாகக் கூறியுள்ளனர். 


இந்த தடுப்பூசி குறித்து பேசிய அதிபர் புடின் (Vladuimir Putin), "உலகில் முதல் முறையாக, புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அந்த தடுப்பூசி குறித்து அச்சப்படத் தேவையில்லை. பரிசோதனைகளின் போது தடுப்பு மருந்து மிகவும் திறமையாக செயல்பட்டது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்த தடுப்பூசி எனது மகளுக்கும் போடப்பட்டுள்ளது எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இந்த தடுப்பூசியில் வலுவான நோய் எதிர்ப்பு இருக்கிறது. இதை வாங்க உலக நாடுகளின் ஆர்வம் காட்டுகிறது என ரஷ்யா தெரிவித்துள்ளது.  


ALSO READ |  நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்ததா... கொரோனா தடுப்பு மருந்து தயார் என்கிறது ரஷ்யா!!


"சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) , பிரேசில், இந்தியா (India)  மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்தவும், அதேநேரத்தில் "இந்தியா, தென்கொரியா மற்றும் பிரேசில், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் கியூபா போன்ற நாடுகளுடன் கூட்டாக இணைந்து, அந்தந்த நாடுகளில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கவும் ரஷ்யா திட்டமிட்டு உள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றுநோய் நாவலை அடுத்து 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து உலகளவில் கிட்டத்தட்ட 750,000 பேரைக் கொன்றுள்ளது. இதனால் உலகப் பொருளாதாரம் முடங்கியுள்ளது. 


ரஷ்யா (Russia) மட்டுமில்லாமல், இந்தியா உட்பட இன்னும் சில நாடுகளும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன. வரும் காலங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அதிக அளவில் தயாரிக்கப்பட்டு, நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபடும்.


ALSO READ |  உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசி: ரஷ்யாவிடம் 100 கோடி தடுப்பூசி ஆர்டர் செய்த 20 நாடுகள்