மகளீருக்கான வட்டு எறிதலின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சீமா புனியாவுக்கு வெள்ளிப்பதக்கம்,  நவ்ஜீத் டில்லியனுக்கு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. 8-வது நாளான இன்று தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளீருக்கான வட்டு எறிதலின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சீமா புனியாவும், நவ்ஜீத் டில்லியனும் தகுதி பெற்றனர்.


இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை சீமா புனியா 60.41 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். நவ்ஜீத் டில்லியன் 57.43 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கம் வென்றார். தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை டேனி ஸ்டீவன்ஸ் தட்டிச்சென்றார்.