எழுத்துச் செம்மல் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், இயற்றமிழ் வித்தகர் விருதும் / பொற்கிழியும் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கலைவாணர் அரங்கத்தில், வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளரும், பைந்தமிழ் மன்றத்தின் தலைவருமான வைகோ அவர்கள் எழுத்துச் செம்மல் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், இயற்றமிழ் வித்தகர் விருதும் / 50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கி அவரது நூல்களை ஆய்வு செய்து உரையாற்றினார்.


இந்நிகழ்ச்சிக்கு செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள் தலைமை தாங்கினார். வரலாற்று ஆய்வாளர் செ.திவான் வரவேற்புரையாற்றினார் எழுத்தாளர் மதுரா, கவிஞர் தங்கமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சி.ஏ.ஆர்.சண்முகசிதம்பரம் நன்றி கூறினார்.