10:48 18-05-2018
குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தி சிவகுமார் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று(மே 18) தீர்ப்பு வழங்க உள்ளது!


தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாகவே தடையை மீறி குட்கா உற்பத்தி செய்யப்பட்டு வருவதும், விற்பனை செய்யப்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த சட்டவிரோத குட்கா விற்பனைக்காக அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 


இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் கடந்த ஜனவரி 30-ம் தேதி மீண்டும் விசாரனைக்கு வந்தபோது தமிழக அரசு, மாநில உணவு பாதுகாப்பு ஆணையர், மனுதாரர் அன்பழகன் தரப்பில் எழுத்துப் பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் தமிழக சுகாதாரத்துறை அலுவலர் சிவக்குமார் மேல்முறையீடு செய்திருந்தார்.   


இந்நிலையில், இதன் மேல்முறையீடு வழக்கு கடந்த மே 14-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கலாமா என்பது குறித்து இன்று தீர்ப்பளிக்க உள்ளது.