உலகெங்கிலும் விலங்குகளை கொல்வதில் நம்பிக்கை கொண்டவர்கள் பலர் உள்ளனர், இறந்தபோதிலும் விலங்குகளை காப்பாற்றும் பலர் இவர்களுக்கு மத்தியில் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த காரணத்திற்காகவே, விலங்குகளை கொலை செய்பவர்களை விட காப்பாறுபவர்கள் அதிகம் உள்ளனர் என கூறுகின்றனர். இவ்வாறான நிகழ்வு ஒன்றே தற்போது ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது. 


ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒருவர் உள்ளூர் பட்டியில் பீர் குடித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு பல்லி அவரது பீர் குவளையில் விழுந்தது, முதலில் அது பொம்மை பல்லி எனவும், யாரோ ஒருவர் அவரை ஏமாற்றுகிறார் எனவும் நம்பிய அவர் பின்னர் தனது பீர் கோப்பையில் விழுந்தது உயிர் உல்ல பல்லி என்பதை உணர்ந்தார். 


தான் அதனை உணர்ந்தபோது அவர் அதற்காக பதற்றம் படவில்லை, மாறாக குவளையில் விழுந்த பல்லியை எடுத்து வாயால் பல்லிக்கு சுவாசம் கொடுத்தார் (கடலில் மூழ்கிய நாயகியை நாயகன் காப்பாற்றுவது போல்). பின்னர் அவர் பல்லியை தலைகீழாக மாற்றி மார்பைத் தட்டினார். இதனை அடுத்த அந்த பல்லி இயல்புநிலைக்கு திரும்பி அவரிடம் இருந்து தப்பிக்க முயல்கிறது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


இந்த முயற்சி ஒரு பல்லியின் உயிரைக் காப்பாற்றியது மட்டும் அல்லாமல், இருவருக்கும் இடையே ஒரு நட்பு பாலத்தையும் உருவாக்கியது. இந்த அழகான வீடியோ இந்த நேரத்தில் தீவிரமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தி டுடே ஷோ ட்விட்டரில் திங்களன்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடியிலிருந்து பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவின் தலைப்பில், 'இந்த ஆஸ்திரேலிய ஹீரோ தனது பீரில் மூழ்கிய பல்லியை லாவகரமாக மீட்டுள்ளார்’ என தலைப்பிட்டுள்ளது.



இந்த வீடியோ இதுவரை 2.7ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும் 35-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. 


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள கொரிண்டி கடற்கரையில் உள்ள ஆம்பிள் விடுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீடியோவில் பல்லியை காப்பாற்றியவர் ப்ரெட், இங்கு பீர் குடிக்க வந்தார். அவர் தனது பீர் குவளையில் ஒரு பல்லியைக் கண்டபோது, ​​பார் ஊழியர்கள் அவருடன் சேர்ந்து விளையாடுவதை உணர்ந்தார். தற்செயலாக அவரது குவளையில் விழுந்ததாக ஊழியர்கள் சொன்னபோது பிரெட் பல்லியின் உயிரைக் காப்பாற்றினார் என்பது உள்ளூர் ஊடகங்கள் வாயிலாக கிடைத்த செய்தி.