புதுடெல்லி: இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பாதி நாடு கலக்கத்தில் இருக்கும்போது, ஒரு நடிகையின் மழையில் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. மழையைப் பார்த்ததும் பால்கனியில் நின்றுக்கொண்டு இருந்த நடிகை நடனமாடத் தொடங்கினார். அவர் வேறு யாரும் இல்லை. தென்னிந்திய  சினிமா மற்றும் பாலிவுட்டில் நடித்து வரும் பிரபல நடிகை சிரேயா சரன் (Shriya Saran) பற்றி தான் பேசுகிறோம். அவர் தனது நடன வீடியோவை சமூக ஊடகத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோவில், சிரேயா சரன் மழையை ரசிப்பதைக் காணலாம். அவர் வீட்டின் பால்கனியில் இருக்கும் போது மழை பெய்ததால், அந்த சிறிய பால்கனியில் கூட நடனமாடுவதை சிரேயாவால் தடுக்க முடியவில்லை. இந்த வீடியோவை சிரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். வீடியோவின் தலைப்பில், "பார்சிலோனாவில் மற்றொரு மழை நாள்'" என்று எழுதியுள்ளார். இந்த வீடியோவைப் பாருங்கள்…


 



கடந்த காலத்திலும் நடிகை சிரியாவின் வீடியோ ஒன்று வைரலாகியது. இந்த வீடியோவில், ஸ்பெயினில் விடுமுறையின் போது அவர் பிகினியில் நடனமாடுவதைக் காண முடிந்தது.