Trending Viral Video: இந்தியாவில் மக்களால் பல்வேறு விதமான சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாட்ஸ்அப், பேஸ்புக், X, இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப், ஸ்னாப்சேட் உள்ளிட்ட பல தளங்களை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். வீட்டில் கல்லூரி படிக்கும் பிள்ளைகள் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட்டில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்றால் பெற்றோர், வயதானோர் யூ-ட்யூப், பேஸ்புக், வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்துகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவை அனைத்திலும் வீடியோக்கள், மீம் புகைப்படங்கள் மிக அதிகமாக பகிரப்படும். அதாவது, எழுத்து சார்ந்த பதிவுகளை விட புகைப்படம், வீடியோ சார்ந்த பதிவுகள் அதிக மக்களை சென்றடைகிறது, மக்களை எளிதாக கவர்கிறது எனலாம். யூ-ட்யூப் ஷார்ட்ஸ் தொடங்கி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வரை வெறும் 1 நிமிடத்திற்குள் வீடியோவை பதிவேற்றும் வசதியை கொண்டுள்ளன. இவை அனைத்தும் இதுபோன்ற வீடியோ பதிவுகளை ஊக்குவிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டது. 


வைரலாகும் எண்ணற்ற வீடியோக்கள்


இதுபோன்று சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் நெட்டிசன்களிடம் வைரல் ஆக பரவுவது வழக்கம்தான். விலங்குகளின் க்யூட் வீடியோ தொடங்கி மனிதர்களின் வினோத வீடியோக்கள் வரை எண்ணற்ற வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும். அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற அதிக இணையவாசிகள் இருக்கும் நாட்டில் எண்ணற்ற வீடியோக்கள் தினந்தினம் அதிக வியூஸ்களை பெறுகின்றன எனலாம். தற்போது வெளியாகும் வீடியோதான் வைரலாகும் என்றில்லை, இரண்டு, மூன்று ஆண்டுகள் பழைய வீடியோக்கள் கூட திடீர் திடீரென வைரலாகும் எனலாம்.


மேலும் படிக்க | இவ்வளவு டீசண்டா ‘மே ஐ கம் இன்’ என்று கேட்க முடியுமா? ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் மான்களின் வீடியோ வைரல்!


அப்படியிருக்க தற்போது இந்தியாவில் எங்கோ நடந்த சம்பவத்தின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. இது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், X தளம் உள்ளிட்டவற்றில் நெட்டிசன்களால் வியந்து பார்கப்படுகிறது. 


அதிர்ச்சி வீடியோ


ஒரு மத்திய வயது பெண் ஒரு வீட்டில் இருந்து வெளியே வந்து சிறிய சாலையை கடக்கிறார். மிக இயல்பாக சென்றிருக்கொண்டிருக்கும் வீடியோவில் திடீரென பார்ப்போரை அதிர்ச்சியில் உள்ளாக்கும் வகையில், வானத்தில் இருந்து தண்ணீர் டேங்க் அவர் தலை மீது விழுகிறது. ஆனால், நல்வாய்ப்பாக அவருக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை. அந்த டேங்க் வந்த வேகத்தில் அடியில் உடைந்ததாக தெரிகிறது.