வைரல் வீடியோ: விலங்குகளின் வைரல் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அதில் பெரும்பாலான வீடியோக்களில் பாம்புகள் காணப்படுகின்றன. இந்த உலகில் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் பாம்புகள் அடங்கும். பாம்பு என்றாலே பலர் அலறியடித்து ஓடுவார்கள். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். பாம்பு என்றவுடனே பயமும் பதற்றமும் ஏற்படும். ஆனால் சிலர் பாம்புகளை கண்டு அஞ்சுவது இல்லை. சிலர் பொம்மைகளாக நினைத்து விளையாடத் தொடங்குகிறார்கள். அதேபோல் பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படிப்பட்ட பாம்புகளை மிக அருகில் பார்க்க இந்த சமூக வலைத்தள சமூக ஊடக வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான நிகழ்வுகளை நாம் இவற்றில் காண்கிறோம். பாம்பின் அளவு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவை மனிதனின் மனதில் கண்டிப்பாக அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ சிலரது மனதை  நடுங்க வைக்கும். 


மேலும் படிக்க: விளையாட்டு விபரீதமானது: நபரை பதம் பார்த்த பாம்பு: வீடியோ வைரல்


ஏனெனில் இங்கு காட்டப்பட்டுள்ள காணொளி பண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது நாகப்பாம்பு அமர்ந்த சம்பவம் நடந்ததுள்ளது.



கலபுர்கி மாவட்டம் அஃபசல்பூர் தாலுகாவில் உள்ள மல்லாபாத் கிராமத்தில் ஒரு விசித்திரமான அதிசய சம்பவம் நடந்துள்ளது. அதன்படி மல்லாபாத் கிராமத்தைச் சேர்ந்த பாகம்மா படல் என்பவரின் பண்ணையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேலை முடிந்து ஓய்வெடுப்பதற்காக பாகம்மா தனது பண்ணையில் தூங்குவது வழக்கம். அப்போது எங்கிருந்தோ வந்த நாகப்பாம்பு ஒன்று அவரது உடலில் ஊர்ந்து தலையை உயர்த்தி அமர்ந்தது.


அவர் மீது நாகப்பாம்பு இருப்பதைப் பார்த்து பகம்மா அதிர்ச்சியடைந்தார். இந்த நேரத்தில், அவர் அசையாமல் படுத்திருந்த அதே இடத்தில் படுத்து, கைகளை கூப்பி மக்கள் அந்த பம்பை வணங்கினார்கள். ஸ்ரீஷைல மல்லையாவைக் காப்பாற்று’ என்று வேண்டிக்கொண்டனர்.


தலையை உயர்த்தி பாகம்மா மீது நாகப்பாம்பு அமர்ந்திருந்த காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோவில் அந்த பெண் கைகூப்பி பிரார்த்தனை செய்வதை காணலாம். நாகப்பாம்பு ஒன்றும் செய்யாமல் தலையை உயர்த்தி அந்த பெண்ணை நோக்கி அமர்ந்திருந்தது. சிறிது நேரம் கழித்து, பாகம்மாவிடம் இருந்து இறங்கிய நாகப்பாம்பு அந்த இடத்தை விட்டு மறைந்தது.


தற்போது, ​​ஒரு பெண்ணின் மேல் நாகப்பாம்பு அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே நாளில் சில வினாடிகள் வீடியோவை ஆயிரக்கணக்கானோர் விரும்பியுள்ளனர். அத்துடன் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். மேலும் இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | பாம்புக்கும் நாய்க்கும் செம சண்டை, ஜெயிச்சது யாரு? அங்தான் ஒரு ட்விஸ்ட்: வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ