விளையாட்டு விபரீதமானது: நபரை பதம் பார்த்த பாம்பு: வீடியோ வைரல்

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு நபர் பாம்பை பிடித்து, அதனுடன் விளையாடுவதைக் காணலாம். அதன் பிறகு நடப்பதை கண்டால் உங்களின் கதி கலங்கி போகும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 22, 2022, 01:04 PM IST
  • பாம்பு வைரல் வீடியோ
  • பாம்புடன் விளையாடியது விபரீதத்தில் முடிந்தது
  • ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது
விளையாட்டு விபரீதமானது: நபரை பதம் பார்த்த பாம்பு: வீடியோ வைரல் title=

பாம்பு வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.

பாம்பை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை பயம் தான்! பொதுவாக பாம்புகளை கண்டால் யாரும் அந்த இடத்தில் நிற்பதில்லை. அங்கிருந்து ஓடி விடுவார்கள். அப்படிப்பட்ட பாம்புகளை மிக அருகில் பார்க்க இந்த சமூக வலைத்தள சமூக ஊடக வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான நிகழ்வுகளை நாம் இவற்றில் காண்கிறோம். பாம்பின் அளவு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவை மனிதனின் மனதில் கண்டிப்பாக அச்சத்தை ஏற்படுத்துகின்றன. 

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சமீபத்திய வீடியோவிலும் இதே போன்ற காட்சி காணப்படுகிறது. இந்த வீடியோ உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தை சேர்ந்தது. இங்கு நபர் ஒருவர் பாம்புடன் வீடியோ எடுப்பது அவருக்கு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ படப்பிடிப்பின் போது, ​​அந்த நபரை பாம்பு கடித்ததால், தற்போது அவர் இறந்துவிட்டார். இறந்தவர் மருழலா கிராமத்தின் முன்னாள் கிராமத் தலைவராக இருந்த தேவேந்திர மிஸ்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பாம்புகளை மிஸ்ரா பிடித்துள்ளார். இதன் போது அவர் தனது வீடியோக்களை படமாக்குவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 

திடீரென பாம்பு கடித்தது
அவர் தனது பக்கத்து வீட்டு ரவீந்திர குமாரின் வீட்டில் இருந்து பாம்பை பிடித்ததாகவும், அந்த பாம்பை பிடித்து வீடியோ எடுக்கும் போது, ​​அவரது பிடியில் இருந்து விடுபட்ட பாம்பு அவரை கடித்ததாகவும் கூறப்படுகிறது. தேவேந்திர மிஸ்ரா பாம்பை கடித்த பிறகு பல்வேறு மூலிகைகள் மூலம் சிகிச்சை அளிக்க முயன்றார், ஆனால் உடலில் விஷம் பரவியதால் அவர் உயிரிழந்தார். 

வீடியோவை இங்கே பாருங்கள்:

பாம்பை பிடித்ததும் தேவேந்திரன் சுமார் ஒன்றரை மணி நேரம் அதனுடன் விளையாடியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, ​​அருகில் இருந்தவர்களும் அவரை மகிழ்ச்சியுடன் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அதற்குள் பாம்பு கையை விட்டு வெளியேறி அவரை கடித்துள்ளது. இந்த விபரீதத்திற்கு முன்னால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. அத்துடன் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | பாம்புக்கும் நாய்க்கும் செம சண்டை, ஜெயிச்சது யாரு? அங்தான் ஒரு ட்விஸ்ட்: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News