Viral Video: சமூக ஊடக தளங்களில் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். இவற்றில் பெரும்பாலானவை நம்மை வியக்க வைக்கும் வகையிலும், ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் உள்ளன. பொதுவாகவே இணையவாசிகள் விலங்குகளின் வீடியோக்களை அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். சமீபத்திலும் ஒரு வீடியோ நெட்டுசன்களின் உள்ளத்தை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவை பற்றி இங்கே காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் மருதாணி இட்டுக்கொள்வதை நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். திருமணம் மட்டுமின்றி பொதுவாகவே பெண்களுக்கு மருதானி வைத்துக் கொள்ள மிகவும் பிடிக்கும். மருதாணி வைத்துக் கொள்வதால் பலவித ஆரொக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. மருதாணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உள்ளது என்று ஒரு குரங்கு காட்டியுள்ளது. அந்தக் குரங்கு பொறுமையாக மருதாணி இட்டுக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.


மெஹந்தி இட்டுக்கொள்ளும் குரங்கு 


வீடியோவில் ஒரு சிறிய குரங்கு படுக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை பார்க்க முடிகின்றது . அதன் கைகளில் மெஹந்தி கலைஞர்கள் சிலர் மருதாணி வைக்க தொடங்குகின்றனர். குரங்கு மிகவும் பொறுமையாக அவர்களிடம் தன் கையை காட்டுகின்றது. ஒரு கையில் மெஹந்தி இட்டவுடன் அந்த கையை பார்க்கும் குரங்கு அதை பார்த்து ஆச்சரியம் அடைகின்றது. மெஹந்தி மிக அழகாக இருப்பது அதற்கு மிகவும் பிடித்துள்ளது என்பதை அதன் முக பாவம் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது.


அழகாய் அமர்ந்து அமர்க்களமாய் மருதாணி இட்டுக்கொள்ளும் குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்: