வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித புதுமைகளையும் அதிசயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் காணப்படும் பல செய்திகளாலும், பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாலும் நாம் மனம் விட்டு சிரிக்கிறோம். நம்மை மறந்து ஆனந்தத்தை அனுபவிக்கிறோம். நமது இறுக்கங்களை சிறிது நேரத்திற்கு மறந்துபோகிறோம். குறிப்பாக, குழந்தைகள் தொடர்பான பல வித வீடியோக்களை நாம் இனையத்தில் காண்கிறோம். இவற்றை நாம் ரசிப்பதோடு, இவற்றை காணும்போது, நம்மை அறியாமல் நம் மனது நம் குழந்தை பருவத்தையும், நமது குழந்தைகளின் சேட்டைகளையும் நினைத்துப் பார்க்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக இணையவாசிகளின் முகத்தில் புன்னகை பூக்கும். இதில் ஒரு குழந்தை தனது அப்பாவித்தனத்தால் அனைவரது மனதையும் வென்று வருகிறது. குழந்தைகள் மிகவும் வெளிப்படையானவர்கள், மனதில் கள்ளம் இல்லாதவர்கள், நினைத்ததை செய்யும் துணிவு கொண்டவர்கள், பிறர் என்ன நினைப்பார் என கவலை கொள்ளாதவர்கள். இப்படி குழந்தைகள் பற்றிய பல விஷயங்களை இந்த வீடியோ நமக்கு புரிய வைக்கின்றது. 


சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் தெரியும் குழந்தையின் அப்பாவித்தனமான செயல் அனைவரது மனதையும் வென்று வருகிறது. பொதுவாக சிறு குழந்தைகள் பல வித குறும்புகளை செய்து தங்கள் பெற்றோரை அதிகமாக தொந்தரவு செய்கிறார்கள். ஆனால், இதில் காணப்படும் சிறுவன் யாரையும் தொந்தரவு செய்யாமல் தன் உலகிலேயே ஐக்கியமாகி இருப்பதை காண முடிகின்றது. திடீரென மழை பெய்யத் தொடங்க இந்த அழகான சிறுவன் மழையை ரசிப்பதை கண்டு நம்மால் இந்த காட்சியை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. 


மேலும் படிக்க | சும்மா இருந்த பசுவை சீண்டிப்பார்த்த நபர்: வெச்சி செஞ்ச பசு, ஷாக் கொடுக்கும் வைரல் வீடியோ 


இந்த சிறுவன் மழையில் நனைந்தவுடன் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை செய்கிறார். இதை பார்ப்பவர்கள் முகத்தின் தானாக புன்னகை எட்டிப் பார்க்கிறது. இந்த வீடியோவை மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள். 


வைரலாகி வரும் வீடியோவில், ஒரு குழந்தை, மழையில் நனைந்த பிறகு, அதை இன்னும் அதிகமாக, அமைதியாக அனுபவிக்க அப்படியே நடு ரொட்டில் மழையில் படுத்துக்கொள்வதை காண முடிகின்றது. சாலையில் படுத்தால் யார் என்ன நினைப்பார்கள் என்ற கவலை எல்லாம் அந்த குழந்தைக்கு இல்லை. தன் மனதில் தோன்றுவதை செய்யும் குழந்தை பருவத்தின் சிறப்பம்சமே அதுதானே!! சிறுவனுக்கு மழை மீது இருக்கும் காதலை அவரது இந்த செயலே எடுத்துக்காட்டுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கொட்டும் மழையில் சிறுவன் செய்த கியூட் செயலை இங்கே காணலாம்:



இந்த வீடியோ சமூக ஊடகங்களில் Buitengebiden என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு 12 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளும் 34 மில்லியன் வியூஸ்களும் கிடைத்துள்ளன. மில்லியன் கணக்கான பயனர்கள் இந்த வீடியோவை ரீட்வீட் செய்து தங்கள் கமெண்டுகளை அளித்து வருகின்றனர். குழந்தையின் சலனமில்லாத ஒரு கியூட் செயல் இணையத்தில் புயலை வீசி வருகிறது. 


மேலும் படிக்க | அட பச்ச கிழவி டா டேய்..ஏமாந்து போன காதலன்: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ