வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


குழந்தைகள் எப்போதுமே மகிழ்ச்சியை அளிப்பவர்கள். அவர்கள் செய்யும் வேடிக்கையான விஷயங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன. குழந்தைகள் செய்யும் வேடிக்கை, குறுப்பு, விஷமம், அவர்களது கோவம், குழந்தைத்தனம், பயம் என அனைத்திலுமே ஒரு வித நகைச்சுவை கலந்திருக்கும். அவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று கூட நம்மால் யோசிக்க முடியாது. 


யாராவது அவர்களை திட்டினால், அவர்களுக்கு பதிலளிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. சமூக வலைதளங்களில் அப்படி ஒரு குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு குழந்தை ஒரு மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருக்கிறது. அப்போது அங்கு அக்குழந்தை ஒரு நாயை பார்க்கிறது. நாயும் குழந்தையை பார்த்து குரைக்கத் தொடங்குகிறது. ஆனால், அதற்கு பிறகு நடக்கும் விஷயம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. 


மேலும் படிக்க | பைக் ஸ்டண்ட் செஞ்சு மாஸ் காட்டிய தாத்தா, கிளாஸ் எடுத்த போலிஸ்: வைரல் வீடியோ 


நாயிடம் இந்த பந்தா தேவையா 


வைரலான இந்த வீடியோவில் குழந்தையை பார்த்து நாய் குரைப்பதை காண முடிகின்றது. அது குழந்தைக்கு பிடிக்கவில்லை. நாய்க்கு பாடம் கற்பிக்க, குழந்தை நாயை நோக்கி நடக்கத் துவங்குகிறது. 


ஆனால், அப்போது வேடிக்கையான ஒரு விஷயம் நடக்கிறது. குழந்தை வருவதை பார்த்த நாய் அதை நோக்கி ஓடி வருகிறது. திடீரென்று, நாயின் பயங்கரமான பாணியைப் பார்த்த குழந்தை, அரண்டு போய் அழுதபடியே திரும்பி ஓடத்  தொடங்குகிறது. குழந்தை மற்றும் நாயின் இந்த அழகான வீடியோ வெளிவந்ததிலிருந்து இளையத்தை தெறிக்க வைக்கிறது. 


நாயிடம் மாஸ் காட்டும் குழந்தையின் வீடியோவை இங்கே காணலாம்: