வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக தாய்மார்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தந்தைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. ஆனால், குழந்தைகளுக்காக மவுனமாக பல மலைகளை சுமப்பவர்கள் தந்தைகள். அவர்கள் மாறுவேடத்தில் உலாவரும் சூப்பர் ஹீரோக்கள். பல முறைகளில், விதங்களில் அப்பாக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். கஷ்டத்தில் இருக்கும்போது, உங்கள் தந்தையை போல உதவுபவர்கள் இருக்க மாட்டார்கள். அனைத்து பிரச்சனைகளுக்கும் அவர்களிடம் தீர்வு இருக்கும். அனைத்து சூழல்களிலும் அவர்கள் தங்கள் குழந்தைகளை காப்பாற்றுகிறார்கள். தந்தையின் இணையற்ற பாசத்தை காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 


மேலும் படிக்க | வகுப்பறையில் ஆசிரியர் செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 


இரு சக்கர வாகனத்தில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருக்கும் நபர் ஒருவர், குழந்தை விழாமல் இருக்க செய்யும் செயலை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு சிறுவனை பின் சீட்டில் வைத்துக்கொண்டு ஒரு நபர் ஸ்கூட்டரில் செல்வதை காண முடிகின்றது. வீடியோவில் சிறுவன் தலை ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது. சிறுவன் தூங்கிக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. 


தூக்க கலக்கத்தில் தனது மகன் கீழே விழுந்து விடாமல் இருக்க, அந்த நபர், ஒரு கையை பின்னால் நீட்டி தன் மகனை அணைத்தவாறு பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் ஸ்கூட்டர் ஓட்டுவதை வீடியோவில் காண முடிகின்றது. இதைப் பார்க்கும் அனைவருக்கும் கண் கலங்குகிறது. அந்த தந்தையின் பாசத்தைக் கண்டு மனம் நெகிழ்கிறது. 


இந்த வீடியோவை நவம்பர் 14 அன்று Abhishek Thapa என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்டார். "அதனால்தான் அவர் அப்பா!!” என்று வீடியோவின் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. 


மகனுக்காக தந்தை செய்த வேலை, கண் கலங்க வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ 32,000-க்கும் மேற்பட்ட வியூஸ்களையும், 13 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த சிறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். ‘ஒரு நாள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நல்ல மழை பெய்தது. எங்களிடம் ஒரு ரெயின் கோட் தான் இருந்தது. அதை எனக்கு அளித்துவிட்டு என் தந்தை நனைந்துகொண்டே வந்தார். எனக்கு இது நன்றாக நினைவிருக்கிறது’ என ஒரு பயனர் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.


‘தந்தையின் கை நம் மீது இருக்கும் வரை நமக்கு எந்த கவலையும் இல்லை. எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும்’ என மற்றொரு பயனர் எழுதியுள்ளார். ‘ என அப்பாவும் இப்படித்தான் செய்வார். என் குழந்தைப் பருவத்தை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘அப்பாக்கள் எதையும் வெளிப்படுத்த மாட்டார்கள், ஆனால் அவர்களது அன்பிற்கு எல்லையேஇல்லை’ என பலர் எழுதியுள்ளனர். 


மேலும் படிக்க | இது உனக்கு தேவையா...நபரை வெச்சி செஞ்ச பாம்பு: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ