ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நவம்பர் மாதம் திருமணத்தை உறுதிப்படுத்தி ட்விட்டரில் தேதி அறிவித்துள்ளனர்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோரின் திருமணம் அடுத்த மாதம் நவம்பர் 14 மாற்றம் 15 ஆம் தேதி நடை பெறுவதாக ரன்வீர் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இவர்களின் திருமணம் இந்து முறைப்படி நடக்க உள்ள திருமண சடங்குகள் மட்டும் நான்கு நாட்கள் நடைபெற உள்ளதாம். 


திருமணத்திற்கு இருவரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள். அவர்கள் யாரையும் செல்போனைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள உள்ளார்களாம். லேக் கோமோ ஒரு அழகான இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. அங்கு மிகப் பிரம்மாண்டமான வில்லாக்கள் உள்ளன. அவற்றில்தான் தனிப்பட்ட விதத்தில், மிகவும் பாதுகாப்புடன் ரன்வீர், தீபிகா திருமணம் நடைபெற உள்ளது என்கிறார்கள்.