Viral Video Latest: இந்தியா போன்று மக்கள் நெருக்கடி மற்றும் மக்கள் தொகை அதிகம் இருக்கும் நாட்டில் உணவு தட்டுப்பாட்டை நிகழாமல் பார்த்துக்கொள்வது எந்தளவிற்கு முக்கியமோ, அந்தளவிற்கு உணவு பாதுகாப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. இது உடல் ஆரோக்கியம் சார்ந்த ஒன்றாகும். தரமற்ற உணவுகளால் பல நேரங்களில் கொடூரமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோசமான, கலப்படம் நிறைந்த, காலாவதியான உணவுகளை உட்கொள்வதால் உடல் உபாதைகள் ஏற்படும். இதுபோன்ற உணவுப் பொருள்களை விற்கும் கடைகள், உணவகங்களில் சாப்பிட்டு வாந்தி, பேதி ஏற்பட்ட செய்திகளையும் நாம் அதிகம் கடந்து வந்திருப்போம். பெரிய பெரிய கடைகளிலும், உணவகங்களிலும் இதுபோன்ற நிலையே இருக்கின்றன. அதேபோன்று தெருவோர கடைகளிலும் உணவு பாதுகாப்பு என்பது எந்தவிதத்திலும் சமரசம் செய்வதை அனுமதிக்க முடியாது. 


அதிர்ச்சியளிக்கும் வைரல் வீடியோ


அந்த வகையில், தற்போது இரு பானிபூரி தயாரிக்கும் நபர்களின் வீடியோ வைரலாகி நெட்டிசன்களை கவலையடைய செய்திருக்கிறது. பானிபூரியை அவர்கள் சுகாதாரமற்ற வகையில் தயாரிப்பதை அந்த வீடியோவில் நீங்கள் காணலாம். வீடியோவில் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு போலீசாரால் கைதும் செய்யப்பட்டுவிட்டனர். அந்த வகையில், இந்த வைரல் வீடியோவின் பின்னணியை இங்கு காணலாம்.