மைசூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கிய ஒரு காட்டு யானையின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது. யானையால் தாக்கப்பட்ட அந்த கூலி தொழிலாளி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை காட்டு யானை தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கர்நாடகா மாநிலம் மைசூர் அருகே நாகர்ஹோலே வனப் பகுதியை ஒட்டியுள்ள கடாஞ்சி கிராமத்தின் அருகே ஒரு காட்டு யானை புகுந்துள்ளது.


காட்டு யானையை பார்த்த பொதுமக்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். யானையைக் கண்டதும் சாலையில் வேகமாக நடந்துசெல்ல முயன்ற ஒரு பெண்ணை பின்புறம் வேகமாக வந்த காட்டு யானை தாக்கியது. இந்த காட்சிகளை அந்த பகுதியில் உள்ள சிலர் படம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


அந்த வீடியோவை இங்கே காணலாம்: