குஜராத்தில் சாலை விதிமுறையினை மீறி வாகன ஓட்டிச்சென்ற பெண்னை பெண் காவலர் ஒருவர் விரட்டிப்பிடித்த சம்பம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் சாலை விதிகளை மீறி பெண் ஒருவர் தனது ஸ்கூட்டி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்து பெண் காவலர் ஒருவர் நிறுத்தியுள்ளார், ஆனால் அவரையும் மீறி அந்த பெண் வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். இதனையடுது காவலர் அப்பெண்னை துரத்திப் பிடித்துள்ளார்.



வாகன நெரிசல் அதிகம் நிலவி அந்த சாலையில் துரிதமாக செயல்பட்ட பெண் காவலர், வாகன ஓட்டியில் வண்டியை விடாமல் துரத்திச் சென்றி பிடித்த விவகாரம் அனவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.


இச்சம்பவமானது அங்கு இருந்த சாலையோர CCTV கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.