நீயா-2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “தொலையுறேன்” பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1979-ம் ஆண்டு இயக்குநர் துரை இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான படம் நீயா. இத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீபிரியா பாம்பாக வாழ்ந்திருந்தார். 


சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இப்படத்திற்கு பின்னர் தமிழ்திரையுலகில் பாம்பு மையப்படுத்திய திரைப்படங்களுக்கு மவுசு கூடியது. தற்போது தொலைக்காட்சிகளில் வரும் தொடர்களிலும் பாம்புகளை மையப்படுத்திய கதைகளும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.



இந்நிலையில் தற்போது பாம்பினை மையப்படுத்தி நீயா-2 என்னும் பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படமானது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நீயா திரைப்படத்தில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது என படக்குழுவினர் முன்னதாக தெரிவித்து இருந்தனர்.


இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க வரலட்சுமி சரத்குமார், காத்ரீன் தெரெஸா, ராய் லட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.


மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் ப்ரோமஷன் வேலையின் ஒரு பகுதியாக படத்தில் இடம்பெற்றுள்ள “தொலையுறேன்” என்னும் பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.