காங்கிரஸ் செயலர் ஆன பிறகு பிரியங்கா காந்தி தனது முதல் டிவிட்டர் பதிவுகளை பதிந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஜனவரி 23 ஆம் தேதி முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். பின்னர் "மிஷன் உத்தர பிரதேசம்" என்ற பிரசாரத்திலும் ஈடுபட்டார். நேற்று அவர் தனது முதலாவது அரசியல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசினார். அதுவும் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள காந்தி நகரில் தொடங்கினார்.


அப்போது குஜராத் மாநிலம் சென்றுள்ள காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் சபர்மதி ஆசிரமம் சென்றனர். அங்கு அவர் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். பிரியங்கா காந்தி பெயரில் தற்போது அகில இந்திய காங்கிரஸ் செயலர் என்னும் முறையில் அதிகார பூர்வ டிவிட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் நேற்று தனது முதல் இரு பதிவுகளை வெளியிட்டுள்ளார்.


பிரியங்கா காந்தி தனது முதல் டிவிட்டர் பதிவில்,


 



 


பிரியங்கா தனது இரண்டாம் பதிவில்,


 



 



இவ்வாறு அவர் பதிவிட்டு இருந்தார்.