மும்பையில் உள்ள கோரேகான் ஃபிலிம் சிட்டியில் ஒரு சீரியலின் படப்பிடிப்பு நடைப்பெற்று வந்த போது, சிறுத்தை ஒன்று தனது குட்டிகளுடன் அந்த தளத்திற்குள் நுழைந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் வகையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படப்பிடிப்பு தளத்தில் சிறுத்தை:


மும்பையில் உள்ள கோரேகான் ஃபிலிம் சிட்டி எனும் இடத்தில் ‘ஷுக் மஹாஞே நஹி காய் ஆஸ்த்ரா’ என்ற மராத்திய தொடரின் படப்பிடிப்பு நடைப்பெற்று வந்தது.  அப்போது படப்பிடிப்பில் இருந்தவர்கள் ஒரு விசித்திரமான விஷயத்தை பார்த்துள்ளனர். ஒரு சிறுத்தை, தனது குட்டிகளுடன் படப்பிடிப்பு நடைப்பெறும் இடத்திற்கு வருவதை பார்த்த அவர்கள், உடனே அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். 


200க்கும் மேற்பட்டோர் இருந்த இடம்:


இதுகுறித்து அந்த படப்பிடிப்பில் இருந்தவர்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவாக வெளியிட்டுள்ளனர்.  நேற்று (ஜூலை 26) கோரேகான் ஃபிலிம் சிட்டியில் மராத்திய சீரியலின் படப்பிடிப்பு நடைப்பெற்று வந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இந்த நிலையில் 4 மணி அளவில் சிறுதை ஒன்று படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்துள்ளது. இதை பார்த்த அனைவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடுவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ள வீடியோவில் இடம் பெற்றுள்ளன. அங்கிருந்த அனைவரையும் இந்த சம்பவம் திகைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை அம்மாநிலத்தை சேன்ர்ந்த சின்னத்திரை நடிகர்களுக்கான சங்கத்தலைவர் சுரேஷ் ஷியாம்லால் குப்தா பகிர்ந்துள்ளார். 


மேலும் படிக்க | மேடையிலேயே ‘அதுக்காக’ செல்ல சண்டை போட்ட மணமக்கள்: வேற லெவல் வைரல் வீடியோ


இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ள அவர், கடந்த 10 நாட்களில் மட்டும் இது போல 4-5 சம்பவங்கள் நடைப்பெற்று விட்டதாக தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கு என்று வருபவர்கள் அவர்களின் உயிரை பணயம் வைத்தும் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுரேஷ் தெரிவித்துள்ளார். 



அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்..


நாளுக்கு நாள் இதையே பிரச்சனையாக தாங்கள் சந்தித்து வருவதாக சுரேஷ்ட் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் திரைத்துறையில் இருக்கும் 1000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்டிப்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார். 


நாயை அடித்த சிறுத்தை..


சம்பவம் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த 18ஆம் தேதி இதே போல படப்பிடிப்பு நடைப்பெற்று வந்துள்ளது. அப்போதும் இதே போல சிறுத்தையின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. அப்போது 200க்கும் மேற்பட்டவர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்துள்ளனர். அப்போது அந்த தளத்தில் இருந்த ஒரு நாயை சிறுத்தை அடித்ததாக கூறப்படுகிறது. 


படப்பிடிப்பு தளம் அமந்துள்ள இடம்:


சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள இந்த தளம், சஞ்சய் காந்தி பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இடம் காட்டுப்பகுதிக்குள் வரவில்லை என்றாலும் சிறுத்தையின் நடமாட்டம் இப்போது ஏன் அதிகரித்துள்ளது என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. 


மேலும் படிக்க | வைரல் வீடியோ: ஓடும் பஸ்ஸில் முடியை பிடித்து அடித்துக்கொண்ட பெண்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ