மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, அன்றைய தினத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக மகளிர் தின பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் கலந்துக்கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர்  கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்கான காணொளி ஒன்றை மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ யூ-டூப் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “மகளிர் தின விழா” அன்புடன் அழைக்கிறது. அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக் குழு உறுப்பினரான ஸ்ரீ ப்ரியா மற்றும் நாசீர் கமீலா தரப்பில் வேண்டுகோள் வைக்கபட்டுள்ளது.


காணொளி:-



நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மதுரையில் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.