காதலை தெரிவிக்க பலரமு பல விசித்திர இடங்களை தேர்ந்தெடுப்பது உண்டு. ஆனால் இங்கு ஒரு காதல் ஜோடி கிரிக்கெட் மைதானத்தில் தேந்தெடுத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக கடந்த 12-ஆம் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து ஜூலை 14-ஆம் நாள் இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 


போட்டி ஒருபுறம் பரபரப்பாக நடந்துக்கொண்டு இருக்க மற்றொரு புறம் காதல் ஜோடி இருவர் தங்கள் காதலை பகிர்ந்து கொண்ட தருணம் கூடியிருந்த அனைவரையும் ஈர்த்துள்ளது.



போட்டியை காண்பதற்கா வந்திருந்த சரண் கில் என்பவர் தீடீரென தனது தோழி பவான் என்பரிடம் தன் காதலை தெரிவித்தார். பொதுமக்களின் மத்தியில் சரண் தெரிவித்த காதலினை பவான் அனைவரின் முன்னிலையிலும் ஏற்றுக்கொண்டார். இந்த தருணத்தின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.