வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தினம் தினம் பல வித வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் பல வகையான வீடியோக்களை நாம் காண்கிறோம். இதில் மனிதகுலத்தின் கருணையின் சாட்சியங்களாக அமையும் வீடியோக்களும் பல உள்ளன. பல மனிதர்கள் மிக அரிய செயல்களை செய்து என்றும் இணையவாசிகளின் இதயங்களில் அசையாமல் நின்று விடுகிறார்கள். 


பிற மனிதர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், சில நல்ல உள்ளம் படைத்த நபர்கள் விலங்குகளிடமும் அதே கருணையுடன் நடந்துகொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம்மால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது. பல வித கம்பிகள் மற்றும் கயிறுகளில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு அப்பாவி குட்டி குரங்கின் வீடியோ இது. 


ட்விட்டரில் பகிரப்பட்டு வைரலான இந்த வீடியோவில், ஒரு குட்டி குரங்கு கம்பிகள் மற்றும் கயிறுகளுக்கு இடையில் சிக்கித் தவிப்பதை காண முடிகின்றது. அந்த சிக்கலில் இருந்து விடுபட குட்டி குரங்கு போராடுவது வீடியோவில் தெளிவாகத் தெரிகின்றது. எவ்வளவு முயன்றும் அதனால் தன்னை அந்த சிக்கலில் இருந்து விடுவித்துக்கொள்ள முடியவில்லை. 


அப்போதுதான் ஒரு அதிசயம் நடக்கிறது. அசைக்க முடியாத உறுதியுடன், கருணை உள்ளம் கொண்ட ஒரு நபர், மெதுவாக அந்த குரங்கை சுற்றியிருக்கும் கயிறுகளையும் கம்பிகளையும் பிரித்து எடுக்கிறார். இந்த கயிற்று சிக்கல் குரங்கின் உயிருக்கே ஆபத்தாக அமைந்திருக்கலாம். 


அந்த நபர் முதலில் குரங்கை தன் கையில் ஆதரவாக எடுத்துக்கொள்கிறார். பின்னர் முதலில் குரங்குக்கு புத்துணர்ச்சி அளிக்க, அதற்கு குடிக்க தண்ணீர் கொடுக்கிறார். பின்னர் மிக மெதுவாக அவர் குரங்கை சுற்றி இருக்கும் கம்பிகளையும் கயிற்றையும் அகற்றுகிறார். அவர் அப்படி செய்யும் போது குரங்குக்கு சில இடங்களில் வலி அதிகமாகிறது. அப்போது அதன் உடல் தூக்கிப்போடுகிறது. அந்த தருணங்களில் அவர் அதை இன்னும் இதமாக அணைத்துக்கொள்கிறார். இந்த காட்சி காண்பதற்கு மிக இணக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் உள்ளது. 


மேலும் படிக்க | காருக்கு அடியில் மறைந்திருந்த 15 அடி நீள ராஜநாகம்.. பதறவைக்கும் வைரல் வீடியோ


மனதை நெகிழ வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோ ட்விட்டரில் @Figensport என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். "இவர் ஒரு அற்புதமான மனிதர்... கடவுள் அவரை ஆசீர்வதிப்பாராக!" என ஒரு பயனர் எழுதியுள்ளார். “இப்படிப்பட்ட நபர்களால் மனித குலத்துக்கே பெருமை” என மற்றொரு பயனர் எழுதியுள்ளார். “இந்த வீடியோ மிக நெகிழ்ச்சியாக உள்ளது.. கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது” என மற்றொருவர் தன்னுடைய மனதை வெளிப்படுத்தியுள்ளார். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | யானைக்கு வந்துது பாருங்க கோவம்.... ஹெல்மெட் ஆசாமி ஓட்டம்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ