வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் யானை தாக்குதலின் பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இவற்றை பார்த்தால் நம்மால் பதறாமல் இருக்க முடிவதில்லை. சமூக ஊடகங்களில் யானைகள் மட்டுமல்லாமல், பல விலங்குகள் மனிதர்களை தாக்கும் பல வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. 


சமீபத்தில் யானைகளின் பல வித அட்டகாசங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. சில வீடியோக்களில் யானைகள் தங்கள் தும்பிக்கையால் பெரிய பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை தூக்கி எறிவதை கண்டோம். சில வீடியோக்களில் கார்களையும் பஸ்களையும் யானை துரத்திச்சென்றதையும் பார்த்தோம். சில வீடியோக்களில், ஆத்திரமடைந்த யானைகள், ஜங்கிள் சஃபாரி செய்துகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை திடீரென தாக்குவதையும் பார்த்திருக்கிறோம். 


இவை அனைத்தும் ஒரு புறம் வைரல் ஆக, யாரும்  எதிர்பாராத ஒரு விஷயத்தை ஒருவர் செய்துள்ளார். அந்த வீடியோவும் வைரல் ஆகி வருகின்றது. காட்டு யானைக்கு முன்னால் சென்று ஒருவர் அதை பல வகைகளில் கடுப்பேற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. 


பொதுவாக, காட்டு யானைகள் மிகவும் ஆபத்தான உயிரினங்கள், ஆனால், இவை மிகவும் அமைதியாக இருக்கும். இவற்றை யாராவது சீண்டினாலோ, அல்லது ஆத்திரமூட்டினாலோ மட்டும்தான் இவை தங்கள் பொருமையை இழக்கும். சாலை அருகில் சென்றுகொண்டிருக்கும் ஒரு காட்டு யானையை ஒருவர் சென்று சீண்டி சிக்கலை இழுத்துக்கொள்வதை வீடியோவில் காண முடிகின்றது. இப்படி செய்து இவர் தன் தலையிலேயே மண்ணை வீசிக்கொள்வது போன்ற ஒரு செயலை செய்கிறார். 


அவர் நீண்ட நேரம் யானையின் முன்னால் நின்று அதை பல விதங்களில் கடுப்பேற்றுகிறார். முதலில் அதற்கு வணக்கம் செலுத்துகிறார். பின், அதன் முன்னால் வினோதமாக நடந்துகொள்கிறார். யானையின் செயலின் மூலம் அதற்கு கோவம் வருவது நன்றாக தெரிகின்றது. அது கோவமாக காலை உதறி தன் கால் அடியில் உள்ள மணலை வீசி எரிகிறது. ஆனால், இது எதையும் பற்றி கவலைப்படாமல் அந்த நபர் யானை முன் பல வித சேஷ்டைகளை செய்து வருகிறார். 


மேலும் படிக்க | அம்மா போல அன்பை பொழியும் நாய்: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ


யானையை கடுப்பேற்றிய நபரின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



இணையத்தில் வீடியோ வைரல் ஆனது


அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதை ஐஎஃப்எஸ் அதிகாரி ரமேஷ் பாண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தியை எழுதும் வரை இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். அனைவரும் யானையை நக்கல் செய்யும் அந்த நபரை விமர்சித்து வருகிறார்கள். 


‘யானையின் பலம் தெரியாமல் இவர் விளையாடுகிறார்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘அந்த யானை நினைத்தால் அந்த நபர் அங்கிருந்து ஒழுங்காக வீடு போக முடியாது’ என மற்றொரு பயனர் எச்சரித்துள்ளார். 


மேலும் படிக்க | கம்பி வேலியை கடந்த காவிய காதல் - சத்தமில்லாமல் பொழிந்த முத்த மழை: Viral Video


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ