தாயாக போகும் நடிகை அனுஷ்கா சர்மா கருப்பு நிற நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma) தனது குழந்தை பம்பைப் பற்றிய ஒரு படத்தை தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர், கருப்பு நிற நீச்சல் உடை அணிந்து, நீச்சல் குளத்திற்குள் சிரித்தவாறு போஸ் கொடுத்துள்ளார். 


மேலும், அந்த புகைப்படத்துடன் அவர்., "'உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் நன்மையை ஒப்புக்கொள்வது எல்லா வளங்களுக்கும் அடித்தளம்' - எக்கார்ட் டோலே. 


எனக்கு இரக்கம் காட்டிய மற்றும் இந்த உலகில் உள்ள நன்மையை நம்பும்படி செய்த அனைவருக்கும் நன்றி, அதை முன்னோக்கி செலுத்தும் நம்பிக்கையுடன் அதைப் பயிற்சி செய்ய என் இதயத்தைத் திறந்தது. ஏனெனில் ...  'எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வீட்டிற்கு நடந்து கொண்டிருக்கிறோம்' - ராம் தாஸ் #WorldGratitudeDay,"என்று அவர் தனது இடுகையில் குறிப்பிட்டுள்ளார். 



அனுஷ்கா தற்போது தனது கிரிக்கெட் வீரர் கணவர் விராட் கோலியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேரத்தை செலவிட்டு வருகிறார். கடந்த 19 ஆம் தேதி துவங்கிய இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்தியா கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி ஆகியோர் 2017 டிசம்பரில் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த மாதம் முதல் முறையாக அவருக்கு ஆதரவாக இருப்பதாக அறிவித்தனர். அவர்கள் 2021 ஜனவரியில் தங்கள் முதல் குழந்தையை வரவேற்பதாக அறிவித்திருந்தனர்.