Viral Video: இணையத்தில் பலவித வீடியோக்கள் தினம் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்பு, குரங்கு, நாய், பூன, சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகள் இணையத்தின் ஹீரோக்களாகவே வலம் வருகின்றன. இவற்றின் வீடியோக்கள் மிக விரைவாக வைரல் ஆகிவிடுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்திலும் குரங்கின் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகின்றது. இதை பார்ப்பதற்கு முதலில் வேடிக்கையாக இருந்தாலும் இதன் முடிவில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கின்றது. விலங்குகளுடன் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாக அமைகின்றது.


குரங்குகள் பொதுவாக மனிதர்கள் வசிக்கும் இடங்களில் அவ்வப்போது வலம் வருவது வழக்கம். பெரும்பாலான சமயங்களில் அவை உணவுகளை உட்கொண்டு விட்டு சென்று விடும் ஆனால் சில நேரங்களில் தங்கள் ஆக்ரோஷமான பக்கத்தையும் காட்டுவதுண்டு. சமீபத்தில் வெளிவந்துள்ள வீடியோவில் அப்படி ஒரு காட்சியைத்தான் காண முடிகின்றது.


வீடியோவில் ஒரு வயதான பெண்மணி வீட்டினுள் அமர்ந்திருப்பதையும் அருகில் ஒரு குரங்கு இருப்பதையும் பார்க்கிறோம். அந்தக் குரங்கு முதலில் அவரை பாசமாக கட்டிக்கொண்டு முத்தம் கொடுக்கிறது. இதைப் பார்த்து மகிழ்ந்த அந்த பெண் அதே அன்பை அதற்கு திருப்பித் தருகிறார். அவரும் அந்த குரங்கை தடவி கொடுத்து முத்தம் கொடுக்கிறார். இதை தூரமாக தள்ளி நிற்கும் பலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் இதை வீடியோவும் எடுக்கிறார். ஆனால் சிறிது நேரத்திற்கு எல்லாம் அந்த குரங்கு திடீரென்று அந்த பெண்ணின் வாயில் கடித்து விடுகிறது. இதனால் அவர் அலற தொடங்குகிறார். உடனடியாக அவரது குடும்ப உறுபினர்கள் பெரிய தடியுடன் அங்கு வந்தவுடன் அந்தக் குரங்கு இந்த இடத்தை விட்டு ஓடுகிறது. துவக்கத்தில் வேடிக்கையாக தொடங்கிய வீடியோ திடீரென திகில் காட்சியாக மாறுகிறது.


முத்தம் திகிலாக மாறிய வீடியோவை இங்கே காணலாம்:



 


மேலும் படிக்க | நீரில் மீன் வேட்டை... அடுத்த நொடியே நடுவானில் விருந்து... வியக்க வைக்கும் சூப்பர் ஸ்டார் கழுகு


இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் pagepostinganimalattacks என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


'காட்டு விலங்குகளுடன் இந்த பாசப்பிணைப்பு தேவையா? அவர்களை நிம்மதியாக விட மாட்டார்களா?' என்று ஒரு இணையவாசி கேள்வி எழுப்பி உள்ளார். 'இப்படிப்பட்ட வகையில் மிருகங்களுடன் பழகுவது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். இந்த பாட்டியை இன்னும் அதிகமாக அது காய்யப்படுத்தி இருக்கலாம். எப்படியோ தப்பித்தார்கள்.' என்று மற்றொரு பயனர் எழுதியுள்ளார்.


குரங்கு மட்டுமல்லாமல் எந்த விலங்கையும் நம்ப முடியாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல உதாரணமாக இருக்கின்றது. அவற்றின் மனநிலை எப்பொழுது வேண்டுமானாலும் மாறும். அவை எப்போது வேண்டுமானாலும் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆகையால் விலங்குகளிடமிருந்து விலகி இருப்பதே நல்லது.


(பொறுப்பு துறப்பு: சமூக ஊடகங்களில் வந்த இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கில் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.)


மேலும் படிக்க | முதலையின் வாய்க்குள் கைவிட்ட நபர்... அப்புறம் என்னாச்சு தெரியுமா? 4 கோடி வியூஸை தாண்டும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ