வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுவும் குரங்குகள் இணையவாசிகளுக்கு மிகவும் பிடித்தமான விலங்குகளாக கருதப்படுகின்றன. இவற்றின் குறும்பு வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவுகின்றன. வாழ்க்கையை நன்றாக வாழ, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் போராட வேண்டும், கடினமாக உழைக்க வேண்டும். ஒரு நல்ல வாழ்க்கையை விரும்பினால், அதற்காக அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். ஆகையால், அமைதியான வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிக்க அனைவரும் இரவும் பகலும் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், உழைத்தும் தாங்கள் விரும்பும் அனைத்தையும் பெற முடியாதவர்கள் ஏராளம். 


அப்படிப்பட்டவர்கள் எப்போதும் வருத்தத்தில் இருப்பதுண்டு. தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் ஒரு வீடியோவை இணையவாசிகள் வாழ்க்கையின் இந்த தத்துவத்துடன் இணைத்து பார்த்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | Shocking Video: ரயில் நிலையத்தில் TTE மீது விழுந்த உயர் மின்னழுத்த கம்பி! 


வைரலாகி வரும் இந்த வீடியோவில் , மரத்தில் தொங்கும் டயரில் குரங்கு ஒன்று வசதியாக அமர்ந்து ஆடிக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. குரங்கு மிகவும் வசதியாக, முற்றிலும் கவலையற்ற நிலையில் நிதானமாக அமர்ந்திருக்கிறது. அதைப் பார்த்தால், அதற்கு எதைப்பற்றியும் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. அதன் வாழ்வில் துக்கமும் பிரச்சனையும் இல்லை. இந்த வீடியோவை பார்த்தால் நமக்கு ஒருவித நிம்மதி நிச்சயம் கிடைக்கும்.


மனதை லேசாக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்த் நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ‘வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்’ என இதன் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் 1 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். 


ஒரு பயனர், ‘அந்த குரங்கிடம் மனிதர்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என எழுதியுள்ளார். மற்றொரு பயனர், வாழ்க்கையில் கவலைப்படுவதைக் காட்டிலும் இன்னும் பல சுவாரசியங்கள் உள்ளன’ என தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | 'எனக்கு கொஞ்சம் X Ray எடுங்க': சூப்பர் யானை, வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ