வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


திருமண மேடையில் மணமகன் மற்றும் மணமகள் இடையே நடக்கும் சண்டை சச்சரவுகளின் வீடியோக்கள் பல இணையத்தில் வலம் வருகின்றன. இனிப்புகளை ஊட்டும்போதும், மாலை அணிவிக்கும்போதும் கூட மணமக்களுக்கு இடையில் சண்டை வந்துவிடுவதுண்டு.  


தற்போது மீண்டும் அதே போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோவில், முதலில் மணமகள் தனது வருங்கால கணவனுக்கு இனிப்புகளை வழங்க விரும்புகிறார். ஆனால், மணமகனோ அதை கண்டுகொள்ளாமல் கேமராவையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.  இதனால் கடுப்பான மணமகள் அந்த இனிப்பை மணமகனின் முகத்தில் தடவுகிறார். ஆனால், மணமகள் இப்படி செய்தவுடன் மணமகனுக்கு பயங்கராம கோபம் வருகிறது. அவர் மேடையிலேயே மணமகளை ஓங்கி அறைந்துவிடுகிறார். 


மேலும் படிக்க | மணமேடையில் போட்டி போட்ட மணமக்கள்: புஷ்அப் போட்டியில் வென்றது யார் 


மணமேடையில் கணவன் மனைவிக்கு இடையில் கடுமையான சண்டை 


ஒரு திருமணத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ-வில் மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கிற்காக மணமக்கள் மணமேடையில் காத்திருப்பது தெரிகிறது. மணமகள் மணமகனுக்கு இனிப்புகளை வழங்கும்போதுதான் அனைத்து சச்சரவுகளும் ஆரம்பிக்கின்றன. மணமகள் அளிக்கும் இனிப்பை சாப்பிடாமல் மணமகன் பந்தா காட்டவே, மணமகள் கடுப்பாகிறார். அவர் மணமகனின் முகத்தில் இனிப்பை பூசி விடுகிறார்.


இதனால் கடுமையாக கோவமடைந்த மணமகன் பளார் பளார் என மணமகளை அடிக்கத் தொடங்குகிறார். பின்னர் இருவருக்கும் இடையில் மேடையிலேயே பலத்த சண்டை நடக்கிறது. மணமகனும் மணமகளும் தொடர்ந்து அடித்துக்கொள்வதை வீடியோவில் காண முடிகின்றது. இவர்களது செயலை பார்த்த இணையதளவாசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். 


குழாயடிச்சண்டை போட்ட மணமக்களின் வீடியோவை இங்கே காணலாம்: