வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்பட்ம் பல வீடியோக்களில் நமக்கு வாழ்க்கை பாடங்களும் பல கிடைக்கின்றன. விலங்குகளின் வீடியோக்களுக்கு இணையத்தில் கிரேஸ் இருக்கும் அதே வேளையில், சிலர் தேவையில்லாமல் விலங்குகளை தொந்தரவு செய்வது போன்ற வீடியோக்களை பார்க்கும்போது வருத்தமும் ஏற்படுகின்றது. இவற்றில் பல வீடியோக்கள் நமக்கு பாடம் புகட்டும் வகையில் உள்ளன. 


நாய் நன்றியுள்ள விலங்கு. விலங்குகளாக இருந்தாலும் சரி மனிதர்களாக இருந்தாலும் சரி, தேவை இல்லாமல் தொந்தரவு செய்தாலோ, பிரச்சனை ஏற்படுத்தினாலோ கோபம் வரும். நாய்களுக்கும் அப்படித்தான். பெரும்பாலும் எந்த விலங்கும் தானாக வந்து மனிதர்களை காயப்படுத்துவது இல்லை. இதை புரிந்துகொள்ளாத சில மனிதர்கள் விலங்குகளை கிண்டல் செய்து, சீண்டி தங்களுக்கு தாங்களே ஆபத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். 


சில மிருகங்களுக்கு கோபம் அதிகமாக வரும். இவற்றை கிண்டல் செய்தால், இவை சரியான பதிலடி கொடுக்கும். தற்போது இதை எடுத்துக்காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு நாய் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்குவது போல் தெரிகிறது.


வைரலாகி வரும் வீடியோவில், ஒரு நபர் நாயை பிடித்துக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அந்த நபருடன் பேசிக்கொண்டிருக்கும் மற்றொரு நபர், அந்த நாயை ஒரு செடியின் தண்டால் லேசாக தட்டிக்கொண்டு இருக்கிறார். அப்போது நாய் சாதாரணமாகத் தான் நடந்துகொள்கிறது. ஆனால், திடீரென அவர் அந்த நாயை தண்டால் வேகமாக அடித்து விடுகிறார். இதனால் நாய்க்கு வெகுவாக கோவம் வருகிறது. அந்த நாய் ஆவேசத்துடன் அந்த நாயை தாக்குகிறது. அந்த நாய் நபரை பல இடங்களில் கடிக்கின்றது. 


மற்றொரு நபர் தனது நண்பனை நாயின் பிடியிலிருந்து விடுவிக்க கடுமையாக முயற்சிக்கிறார். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாய்க்கு கோபம் வந்துவிட்டால் எத்தனை பேர் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. 


மேலும் படிக்க | Viral Video: காதலியை மயக்க ஆண் மயில் ஆடும் அற்புத ஒயிலாட்டம்... மனம் இரங்காத பெண் மயில்!


நாய்க்கு வந்த கோவத்தால் சின்னாபின்னமான நபர்


நாயிடம் இருந்து உயிரை காப்பாற்ற அந்த நபர் மேற்கொள்ளும் போராட்டத்தை வீடியோவில் காண முடிகின்றது. அவரது நண்பரும் மிகவும் முயற்சிக்கிறார். ஆனால் அவரை நாயின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. நாய் அந்த நபரை நன்றாக தாக்கி விடுகின்றது. 


 நாயின் ஆவேசத்தின் விளைவை இந்த வீடியோவில் காணலாம்:



வீடியோ வைரல் ஆனது:


இந்த வீடியோ ட்விட்டரில் @cctvidiots என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு 60 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 'அந்த நபருக்கு இது தேவைதான்' என ஒரு பயனர் கூறியுள்ளார். 'இது அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும்' என மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார். 'விலங்குகளை தொந்தரவு செய்தால் இப்படித்தான் நடக்கும்' என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 


தேவையில்லாமல் விலங்குகளை தொந்தரவு செய்தால் என்ன தண்டனை என்பதற்கு இந்த வீடியோ ஒரு எச்சரிக்கையாக உள்ளது. விலங்குகளும் இயற்கையின் படைப்புகளே. அவற்றை கனிவாக பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும். 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | சுற்றி வளைத்த மலைப்பாம்பை வெச்சி செஞ்ச சிறுவன்: அரண்டு போக வைக்கும் Viral Video


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ