பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணி என்றால் அது கண்டிப்பாக நாயாக தான் இருக்கும், சிலர் பூனை, முயல், கிளி போன்றவற்றை வளர்ப்பார்கள் ஆனால் ஏராளமானோர் நாயை தான் வளர்க்கின்றனர்.  நாய்களும் அதன் உரிமையாளர்களுடன் நண்பர்களை போலவே உற்சாகமாக விளையாடுகின்றனர், பலவிதங்களில் நாய்கள் அதன் உரிமையாளருக்கு சிறந்த உதவியாளனாக இருக்கிறது.  நாயின் உரிமையாளர் ஒரு பொருளை தூரமாக தூக்கி வீசி, அவர்களது நாயை விட்டு அந்த பொருளை எடுத்துவர சொல்லுவார்கள்.  அப்போது அந்த நாயும் உரிமையாளரின் வார்த்தைக்கு உடனடியாக கட்டுப்பட்டு வேகமாக ஓடிச்சென்று அந்த பொருளை எடுத்துவரும், இதுபோன்ற காட்சியை தான் நாம் பெரும்பாலும் இணையத்திலோ அல்லது நேரிலோ கண்டு ரசித்திருப்போம்.  ஆனால் இங்கு அதற்கு நேர்மாறாக ஒரு சம்பவம் நடந்துள்ளது, அந்த காட்சியில் நாய் செய்யும் செயலை கண்டு நெட்டிசன்கள் சிரித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க: அம்மாவ அம்போனு விட்டுட்டு மொபைலுடன் ஓடியே போன சிறுமி: சிரிப்புக்கு நாங்க கேரண்டி


அப்படி சிரிக்கும் அளவிற்கு நாய் என்னதான் செய்திருக்கும் என்பதை ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.  அந்த வீடியோவில் கடற்கரையோரத்தில் ஒரு நபரும், கொஞ்சம் தள்ளி ஒரு நாயும் நிற்பதை பார்க்க முடிகிறது.  அந்த நபர் கையில் செருப்பு போன்ற ஒரு பொருளை வைத்து கொண்டு இதனை தூக்கி வீசுகிறேன் நீ சென்று எடுத்து வா என்பது போன்ற சைகையில் கூறிவிட்டு நாயிடம் காட்டிவிட்டு அந்த பொருளை கடலில் தூக்கி வீசுகிறார்.  அவர் அந்த பொருளை வீசியதும் நாயும் வேகமாக ஓடிச்செல்கிறது, அந்த பொருளை தான் நாய் எடுக்கப்போகிறதோ என்று நினைத்த நமக்கு அங்குதான் ஒரு ட்விஸ்ட் காத்திருக்கிறது.  அது என்னவென்றால் அந்த நாய் ஓடிச்சென்று பொருளை எடுக்காமல் அந்த நபருக்கு பின்னாலிருந்து வேகமாக ஒரு உதய் கொடுக்க அந்த நபர் தடுமாறி தண்ணீரில் விழுந்து விடுகிறார்.


 



நீதானே வீசினாய், நீயே போயி எடுத்துக்கொள் என்பது போல அந்த நாய் செய்த செயல் இணையவாசிகளை சிரிக்க வைத்துள்ளது.  இந்த நகைச்சுவையான காட்சியை இதுவரை இணையத்தில் நாற்பத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகின்றது.


மேலும் படிக்க: Viral Video: கரும்பை ரசித்து ருசித்து சாப்பிடும் க்யூட்டான பாண்டா கரடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ