புதுடெல்லி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள்  ரத்து தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு அரசின் முடிவுகளை வரவேற்றிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏழாவது ஊதியக்குழு ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான  வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது!



அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி  தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. முதற்கட்டமாக ஒழுங்கு நடவடிக்கைகள்  திரும்பப்பெறப்பட்டதில் மகிழ்ச்சி!



அடுத்தக்கட்டமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய உயர்வு நிலுவைத் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!



Also Read | பட்ஜெட்டில் வளர்ச்சிக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை: PMK


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G 


Apple Link - https://apple.co/3loQYeR