இணையத்தை கலக்கும் குழந்தைக்கு ஐஸ்-கிரீம் ஊட்டி மகிழ்ந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வீடியோ....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேசத்தில் இன்னும் ஒரு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பிரட்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் பெயர் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றிருந்தும் அவர் மீது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார். அதேநேரத்தில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் செரீப்பை நீக்கியதைக் குறிப்பிட்டார்.


இதற்குப் பதிலளித்துள்ள சிவராஜ் சவுகான், ராகுல்காந்தி தன்மீதும் தன் குடும்பத்தினர் மீதும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறுவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, நேற்று இரவு ஒரு கடையில், ஒரு குழந்தைக்கு ஐஸ்-கிரீம் ஊட்டி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரளாகி வருகிறது. அந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது. 



ராகுல்காந்தி மீது சிவராஜ் சவுகான் தொடர்ந்த அவதூறு வழக்கு வழக்கு வருகின்ற நவம்பர் 3-ஆம் நாள் விசாரணைக்கு வருகின்றது.