வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெக்சிகோவில் உள்ள ஒரு நகரத்தில் நடந்துள்ள ஒரு பயங்கரமான சம்பவத்தில், ஒரு நாய் மனித தலையை கவ்விக்கொண்டு ஓடிய காட்சியை கண்ட மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். Zacatecas என்ற நகரத்தின் தெருக்களில் ஒரு நாய் மனித தலையை வாயில் வைத்துக்கொண்டு ஓடுவதை பலர் கண்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ, ஒரு திகில் படத்தை போலவே இருந்தது. இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் நாய் மனித கழுத்தை அதன் தாடையில் பிடித்துக்கொண்டு தெருவில் ஓடுவதைக் காண முடிகின்றது. 


உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, போலீசார் நீண்ட நேர முயற்சிக்கு பிறகு, நாயின் வாயிலிருந்து மனித தலையை வெளியே எடுத்தனர். 


மேலும் படிக்க | பீர் அடிச்ச குரங்கின் வேற லெவல் ரியாக்‌ஷன், ஷாக் ஆன நெட்டிசன்கள்: வைரல் வீடியோ 


இந்த வீடியோ வன்முறையால் பாதிக்கப்பட்ட வட மாநிலமான Zacatecas இல் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வன்முறை சம்பவம் நடந்த ஒரு இடத்திலிருந்து நாய் ஒன்று, ஒரு மனித தலையை எடுத்துக்கொண்டு ஓடியதாகவும், எங்காவது அமைதியான இடத்தில் வைத்து அதை சாப்பிட நாய் நினைத்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். வன்முறை நடந்த இடத்தை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முன் நாய் மனிதத் தலையைப் பிடித்துக் கொண்டு ஓடிவிட்டதாக, நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக மெக்சிகன் செய்தித்தாள் எல் யுனிவர்சல் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த வீடியோ சிலருக்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கலாம். பலவீனமான இதயம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது: 



இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இறந்த நபர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவரது உடலின் மற்ற பாகங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.


இறந்தவரின் பாலினம் மற்றும் வயதைக் கண்டறிய அவரது தலை பின்னர் தடயவியல் குழுவிற்கு அனுப்பப்பட்டது. கேங்வாரின் ஒரு பழிவாங்கும் படலமாக இந்த நபர் கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 


சமீபத்தில், குரேரோவில் இரண்டு போட்டி கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையில் ஒரு முன்னாள் மேயர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்திய ஆண்டுகளில், மெக்சிகோவின் Zacatecas இல் வன்முறை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ‘ஓடிருடா கைப்புள்ள’: பாகற்காயை ருசி பார்த்த குரங்கு, வைரலாகும் மாஸ் ரியாக்‌ஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ