இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் உள்ளது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அதன்படி பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.


மேலும் படிக்க | அட ஒண்ணுமில்லபா.. வெயில் கொஞ்சம் அதிகமா இருக்கு: தாத்தாவின் மூளையை பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ


அந்தவகையில் சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. இதில் ஒரு விஷப்பாம்பு வீடியோவைப் பார்த்து நீங்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோவில் அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்த விஷப்பாம்பு ஒன்று, குடும்பத்தினரை படாதபாடுபடுத்தி எடுத்துள்ளது. அதன்படி அந்த விஷப் பாம்பு வீட்டின் டாய்லெட்டின் கோப்பைக்குள் பதுங்கி இருப்பதை ணாம் காணலாம்.


கழிவரையின் இந்த பகுதியில் பாம்பு காணப்பட்டது
இந்த வீடியோவில் இந்திய டாய்லெட் இருக்கை முதலில் காணப்பட்டது. இந்த இருக்கையின் விளிம்பில் ஒரு ஆபத்தான பாம்பு பதுங்கி அமர்ந்திருக்கிறது, அதை பாம்பு பிடிப்பவர் தனது கருவியால் மிகவும் எச்சரிக்கையுடன் வெளியே எடுப்பது போல் தெரிகிறது. இதன் போது அந்த நபர் பாம்பை அதன் வாலின் உதவியால் மட்டும் பிடித்து இழுத்தார். அப்போது ஆண்த ஆபத்தான விஷப்பாம்பு எதிரில் தென்பட்டது. பாம்பு பிடிப்பவர் மிக மெதுவாக ஆண்த பாம்பையும் வெளியே எடுத்து பின்னர் ஒரு பெட்டியில் அடைத்து வைக்கிறார்.


கழிவரையில் பதுங்கி இருந்த பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:



இந்த பாம்பு மீட்பு வீடியோ ஸ்னேக் நவீன் என்ற இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் பகிரப்பட்டுள்ளது. இந்த வைரலான வீடியோவை பல லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது மற்றும் ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். அதன்படி இந்த வீடியோவை பார்த்து மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்து பல பயனர்கள் ஒரு புதிய வகை பயம் உருவாகி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர். சில பயனர்கள் பாம்பைப் பற்றி கவலைப்பட்டுள்ளனர்.  


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | திருமணத்தில் தெறிக்கவிட்ட மாப்பிள்ளை: ஸ்டெப்ஸ் பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ