Viral Video: சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோகளுக்கு பஞ்சமில்லை. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் பொதுவாக இணையத்தில் பட்டையை கிளப்புகின்றன. பாம்பு என்றாலே நமக்கு எவ்வளவு அச்சம் ஏற்படுகின்றதோ, அதே அளவு ஆர்வமும் ஏற்படுகின்றது. பாம்பின் செயல்களை அருகில் சென்று பார்க்க முடியாது என்பதால், இந்த வீடியோக்களின் மூலம் பாம்புகளின் வாழ்க்கையில் ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளை மக்கள் கண்டு களிக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்திலும் இரு பாம்புகளின் வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது. இது பார்ப்பதற்கு மிக வித்தியாசமாக உள்ளது. ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், படுக்கையறையில் இந்த இரு பாம்புகளும் காணப்பட்டன. குடும்ப உறுப்பினர்கள் இதை கண்டு அச்சத்தின் உச்சிக்கே சென்றார்கள். கொடிய விஷ பாம்புகள் இரண்டு, தங்கள் வீட்டில் பின்னிப்பிணைந்து சண்டை போட்டுக்கொண்டு இருந்தால் யார்தான் அச்சம் கொள்ள மாட்டார்கள்?


இரு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து கொண்டு வீட்டில் செய்த அட்டகாசம் வீட்டில் இருந்தவர்களை பயத்தில் ஆழ்த்தியது.  படுக்கைக்கு அடியில் பாம்புகள் இருந்த நிலை அந்த குடும்ப உறுப்பினர்களை உஷாராக வைத்தது. அவர்கள் வன அதிகாரிகளை உதவிக்கு அழைத்தனர். 


பீட் ஊழியர் ஒருவருக்கு நள்ளிரவில் அவசர SOS அழைப்பு வந்ததாக வன அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது பதிவில் கூறியுள்ளார். பாம்புகள் பத்திரமாக மீட்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விடப்பட்டன. பாம்புகளின் இந்த அரிய நிகழ்வை காண கிராம மக்கள் அந்த வீட்டிற்கு முன்னே கூடி விட்டனர். 


மேலும் படிக்க | நாயை விரட்டப்போய் உயிரை விட்ட இளைஞர்!! இதயத்தை நிறுத்தும் வைரல் வீடியோ


“எங்கள் பீட் ஊழியர் ஒருவருக்கு நேற்று நள்ளிரவில் ஒரு கிராமத்திலிருந்து SOS அழைப்பு வந்தது. அதிக விஷத்தன்மை வாய்ந்த 'வால்ஸ் கிரெய்ட்' பாம்புகள் தங்கள் படுக்கைக்கு கீழ் சண்டை போடுவதை காண அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். எங்களுக்கு அழைப்பு வந்தவுடன் நாங்கள் அங்கு சென்றோம். பாம்புகள் தற்போது மீட்கப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளன” என்று கஸ்வான் தனது பதிவில் கூறியுள்ளார். 


ரணகளமா, குதூகலமா என புரியாமல் குழப்பும் பாம்புகளின் வைரல் வீடியோ:



வீடியோவில். ​​குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் படுக்கையறையில் உள்ள பாம்புகளின் நடவடிக்கைகளை தொலைபேசியில் பதிவு செய்வதை காண முடிகின்றது. குடும்பத்தின் மற்ற நபர்கள் பயத்துடன் வீட்டிற்கு வெளியே இருக்கிறார்கள். 


இந்த வீடியோ சமூக ஊடக தளமான X -இல்  இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வானின் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக கவனத்தை ஈர்த்தது. இதற்கு சுமார் 200.3k வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


‘பாம்புகளை பத்திரமாக மீட்டு, அந்த பாம்புகளையும், குடும்ப உறுப்பினர்களையும் காப்பாற்றிய வன அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘அந்த பாம்புகள் சண்டை போடுவதாக தெரிவதில்லை. இரண்டும் காதல் வயப்பட்டுள்ளன.’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். "இந்த அழகான அப்பாவி உயிரினத்தை பாதுகாப்பாக விடுவித்ததற்காக முழு குழுவிற்கும் நன்றி" என்று மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார். 


பாம்புகளுக்குத் தீங்கு விளைவிக்காத குடும்பத்தைப் பாராட்டிய ஒருவர், “நிச்சயமாக, இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான பாம்பு கடி இறப்புகளுக்கு அவசரப்படு பாம்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களே காரணம். இந்த குடும்ப நபர்கள் பாம்புகளை தாங்களே கையாளாமல் வன அதிகாரிகளை அழைத்ததற்கு அவர்களை பாராட்ட வேண்டும்’ என தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | சின்ன பாம்பு... ஆனா வாய் பெருசு... அசால்ட்டாக பெரிய முட்டையை முழுங்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ