நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'தேவ்' திரைப்படத்திற்காக பாடகர் பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீரன் அதிகாரம் ஒன்று, கடைகுட்டி சிங்கம் திரைப்படத்திற்கு பின்னர் கார்த்தி நடித்துவரும் திரைப்படம் 'தேவ்'. இப்படம் இவரது 17-வது திரைப்படம் ஆகும், அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இத்திரைப்படத்தினை இயக்குகிறார். 



தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களின் வாழ்க்கை எப்படி பயணிக்கின்றது என்பதே இத்திரைப்படதின் கதை. ஆக்ஷன், அட்வென்ச்சர்ஸ், ரொமான்ஸ் என கலர்புல்லாக இத்திரைப்படம் உருவாக்கப் பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.


கார்திக் ஜோடியாக ராகுல் பிரீத் நடிக்க, பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதார வம்சி என முன்னணி நடிகர்கள் முன்னணி கதாப்பாத்திரத்ததில் நடித்துள்ளனர். ஹரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கின்றார். பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் போன்ற நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்து வருகின்றன. 


இந்நிலையில் இத்திரைப்படத்திற்காக பாடல் ஒன்றினை பாடகர் பாலசுப்பிரமணியம் பாடியுள்ளதாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தெரிவத்துள்ளார்.