செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு நடிக்கும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் முதல் நாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'அத்திரண்டிகி தாரேதி'. இப்படம் அதிக வசூள் சாதனை படைத்தது மட்டும் அல்லாமல், நான்கு விருதுகளையும் தட்டி சென்றது. இத்திரைப்படம் கன்னடம் மற்றும் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழிலும் உருவாகி வருகிறது. ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 


இப்படத்தினை இயக்குநர் சுந்தர்.சி இயக்க, சிம்பு நாயகனாக நடிக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கின்ன்றார். இவர்களுடன் கேத்ரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மஹத் ராகவேந்திரா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கின்றார்.



இந்நிலையில் தற்போது இப்படம் வரும் பிப்ரவரி மாதம் முதல் நாள் வெளியாகும் என இப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரடகஷன்ஸ் அறிவித்துள்ளது.


முன்னதாக இத்திரைப்படம் பொங்கல் திருநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது, ஆனால் பொங்கல் திருநாளில் அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட திரைப்படங்கள் வெளியானதை அடுத்து இப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது.