தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தாய்லாந்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவுக்கு சென்று அங்குள்ள ஒரு புலியுடன் விளையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் தாய்லாந்து நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள உயிரியல் பூங்காவுக்குச் சென்ற அவர் அச்சமின்றி புலியுடன் விளையாடி உள்ளார். மேலும் அந்த புலியுடன் விளையாடும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


 



 


இதுபோலவே கடந்த ஆகஸ்டு மாதம் ஜப்பான் சென்றிருந்த போது தனது மடியில் சிங்கக்குட்டி ஒன்று அமர்ந்திருந்தப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.