நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாக சிலர் சந்தேகம் கிளப்பியிருக்கும் நிலையில் அது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 11 மணியளவில் துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார். 


முதலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது பின்னர், உடற்கூறு ஆய்வில் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும், அதனால் மயங்கி தவறுதலாக குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக என கூறப்பட்டது. அனைத்து விசாரணைக்கு பிறகு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இரவு நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது.


அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீ தேவியின் உடல் முதலில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்பு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். 


திரையுலகினர் மட்டுமல்லாது, அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நண்பகல் 2 மணிக்கு மேல் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மாலை 3.30 மணியளவில் மும்பை, வில்லேபார்லே மயானத்தில் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.


நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாக சிலர் சந்தேகம் கிளப்பியிருக்கும் நிலையில் அது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


இந்த நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.


அவர் கூறுகையில், ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஐக்கிய அரபு அமீரகம் எங்களிடம் கொடுத்து விட்டது. அந்த ஆவணங்களின் அடிப்படையில், அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியேதும் இருந்திருந்தால், இப்போது வெளியே அம்பலமாகியிருக்கும் என்றார்.