அவசரமான இந்த உலகத்தில் சக மனிதரை நின்று பார்க்க நேரமின்றியும், மனமின்றியும் பலர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். மனிதம் என்ற ஒன்று அழிந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு ஏராளமான விஷயங்கள் உலகெங்கும் நடந்துவருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேசமயம் அனைத்து உயிர்களையும் சமமாக மதித்து எந்த உயிர் ஆபத்தில் சிக்கினாலும் உடனடியாக ஓடோடி சென்று உதவும் மனம் படைத்தவர்களும் உலகத்தில் இருக்கவே செய்கிறார்கள். அவர்களது செயல் மனிதம் மறந்து பறந்துகொண்டிருக்கும் பலருக்கு சவுக்கடி கொடுப்பது போலவே இருக்கும்.


அந்தவகையில் தற்போது ஒருவர் வெள்ளத்தில் இருந்த நாயை மீட்டிருக்கிறார். சாதாரணமாகவே எந்த உயிர் ஆபத்தில் சிக்கினாலும் நமக்கென்ன இருப்பவர்கள் மத்தியில் இவரோ தனது திருமண கொண்டாட்டத்தை நிறுத்திவிட்டு வெள்ளத்தில் சிக்கியிருந்த நாயை மீட்டுள்ளார். 


மேலும் படிக்க | Rare Penis Plant: ஆண்குறி பூக்களைப் பறிக்காதீர்கள்: கம்போடிய அரசின் எச்சரிக்கை


அந்த வீடியோவில் நாய் ஒன்று வெள்ளத்தில் சிக்கி செய்வதறியாது நின்று கொண்டிருக்கிறது. இதனைக் கண்ட அந்த மனிதர் உடனடியாக தான் போட்டிருந்த கோட்டை கழற்றிவிட்டு துணைக்கு இன்னொருவரை அழைத்துக்கொண்டு அந்த நாயை மீட்கிறார்.


 



இந்த வீடியோவை பார்த்த பலரும் இவர் போன்ற மனிதம் படைத்தவர்கள் இருப்பதால்தான் உலகம் இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறது என கூறி அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR