சிறுத்தை மற்றும் புலி வேட்டையாடுவதில் சாமர்த்தியமான விலங்குகள். இரையை துரத்தி பிடிப்பதிலும், மெதுவாக அருகில் சென்று நொடியில் வேட்டையை பிடிப்பத்திலும் புலிக்கு நிகர் புலியே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அடிக்கடி சொல்லும் வசனம் ‘ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது’. இந்த வசனம் புலிக்கு அப்படியே பொருந்தும். ஏனென்றால், புலியின் பார்வையில் இரை சிக்கிவிட்டால், அது ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது. மரம் ஏறத்தெரியும், வேகமாக பாய்ந்து சென்று பிடிக்கத் தெரியும். இன்னொரு விஷயம் என்னவென்றால் நீந்தவும் தெரியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | கூடு கட்ட முயற்சி செய்யும் பறவை! இணையத்தில் வைரலான வீடியோ!


டிவிட்டர் மற்றும் யூடியூப்களில் இருக்கும் வீடியோக்களில் மான் உள்ளிட்ட விலங்குகள் புலியிடம் இருந்து தப்பிக்க ஆறு மற்றும் ஓடைகளில் குதிக்கும். பின்செல்லும் புலி, ஆற்றில் நீந்தி சென்று இரையை லாவகமாக பிடித்துவிடும். இந்த ஸ்டைல் வீடியோக்களை பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், நீருக்கு அடியில் சென்று, மண்ணில் புதைந்திருக்கும் மீன் உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களை வேட்டையாடி நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?.



இந்த வீடியோவில் இருக்கும் புலி நீருக்கு அடியில் சென்று வேட்டையை தேடிப் பிடிக்கிறது. பலரும் புலி இப்படி வேட்டையாடி பார்த்ததில்லையே என ஆர்வமுடன் இந்த வீடியோவை ரசித்து வருகின்றனர். இதனால் இணையத்தில் நீருக்கடியில் வேட்டையாடும் புலியின் வீடியோ வைரலாகியுள்ளது.


ALSO READ | உயிருக்கு உலை வைக்கும் மொபைல் மோகம்; CISF வீரர் காப்பாற்றிய வைரல் வீடியோ..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR