பிக்பாஸ் பிரபல சாராக்கான், தனது கவர்ச்சி புகைப்படத்தினை இணையத்தில் பதிவிட்டதால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பதிவேற்றுவதால் பல நிகழ்வுகள் நடைபெறும். அதாவது உங்கள் புகைப்படத்திற்கு Likes, Comments அதிகமாக கிடைக்கும், அதே வேலையில் படு மோசமான விமர்சனங்களும் வரும். இத்தகு அனுபவத்தை தான் பிக்பாஸ் பிரபலம் சாராக்கான் தற்போது அனுபவித்து வருகின்றார்.


பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைக்க நினைப்பவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாயிலாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சாராக்கான். இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக வலம் வருகின்றார். 



பிஸியான படபிடிப்பு வேலைகளுக்கு மத்தியில் இவர் தனது புகைப்படங்களை சமூக ஊடகங்களின் வாயிலாக பகிர்வதையும் இவர் மறப்பிதில்லை. அந்த வகையில் இவர் சமீபத்தில் சற்று கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் இஸ்லாமிய மதத்தில் பிறந்த ஒரு பெண் மத கோட்பாடுகளை பின்பற்றாமல் இவ்வாறு அநாகரிகமாக ஆடைகள் அணிவது முறைதான எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



முன்னதாக இவர் மதுபான குடுவையுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருப்பதும், டபூள் பீஸ் எனப்படும் பிகினி ஆடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை இணையத்தில் பகிர்ந்து இருப்பதும் இவரது மார்க்கெட்டிற்கு பிரச்சனையாக அமைந்துள்ளது.