புதுமண தம்பதிகளான விராட், அனுஷ்காவிற்கு கடற்கரை மணலில் சிற்பக்கலைஞர் ஒருவர் வீடு கட்டி பரிசளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர்கள் சில தினங்களுக்கு முன்பு இருவரும் இத்தாலியில் உள்ள டஸ்கனி நகரில் திருமணம் செய்துக் கொண்டனர். அதற்காக புகைப்படங்களை அவர்கள் தங்களது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டார்.


இதற்கிடையே, ஒடிசாவை சார்ந்த சுதர்சன் பட்நாயக் என்ற சிற்பக்கலைஞர் இந்த இளம் தம்பதியருக்கு கடற்கரை மணலில் மிக அழகான மணல் சிற்பம் ஒன்றை வரைந்து பரிசத்துள்ளார்.


அதில் கிரிக்கெட் மட்டை மற்றும் பந்து உள்ளதை போலவும் அதில் அனுஷ்கா, விராட் உருவம் பதிந்துள்ளதை போலவும் வடிவமைத்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு அனுஷ்கா இது மிக அழகாக உள்ளது. நாங்கள் இருவரும் சிறப்பாக இருக்கிறோம். ரொம்ப நன்றி என பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.